பொலிஸாருக்கு முன் நிர்வாணமாக நின்ற பெண்
Read Time:1 Minute, 9 Second
அம்பலாங்கொடை, வளவை தோட்டத்தில் கஞ்சா சுற்றிவளைப்புக்காகச் சென்ற பொலிஸார் பாரிய பிரச்சினையொன்றுக்கு முகங்கொடுத்தனர்.
குறித்த பகுதியில் கஞ்சா வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 50 வயதுடைய பெண்ணொருவர், திடீரென தனது ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக நின்றுள்ளார்.
அத்துடன், அவ்விடத்துக்கு வந்த அப்பெண்ணின் மகளும் தனது மேலாடையைக் களைந்தவாறு பொலிஸார் தங்களை வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சிப்பதாக கத்தி கூச்சிலிட்டுள்ளார்.
இருப்பினும், பொலிஸார் சந்தேகநபராக 50 வயது பெண்ணுக்கு ஆடைகளை அணிவித்து கைது செய்து அழைத்துச் சென்றதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating