சிறுவர் இல்ல சிறுவன் உயிரிழப்பு
கிளிநொச்சி ‘காந்தி’ சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவன் ஒருவன் உடல்நலக் குறைவினால் திடீரென இன்று உயிரிழந்துள்ளார்.
பெற்றோரை இழந்த சிறுவர்கள் பலர் காந்தி சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு மேற்படி இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்த இராஜேஸ்வரன் (7) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
இச்சிறுவனது சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு, பொலிஸ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் சடலம் சிறுவர் இல்ல நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக சிறுவர் இல்லத்தின் தலைவர் தி.இராசநாயகம் கருத்து தெரிவிக்கையில், ‘உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மேற்படி சிறுவனுக்கு 3 இலட்சம் ரூபாவிற்கு மருத்துவ பரிசோதனைகள் செய்த போதும், அந்தச் சிறுவனுடைய நோய் என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையிலே இச்சிறுவன் இன்று உயிரிழந்துள்ளான்’ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating