இந்திய ஊடகவியலாளர் மகா.தமிழ்ப் பிரபாகரன் நாடு கடத்த ஏற்பாடு
Read Time:1 Minute, 22 Second
கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்திய ஊடகவியலாளர் மகா.தமிழ்ப் பிரபாகரன் நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் ஜூனியர் விகடன் பத்திரிக்கையின் ஊடகவியலாளரான மகா.தமிழ்ப் பிரபாகரன் விசா விதிமுறைகளை மீறி செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின்போரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் மகா.தமிழ் பிரபாகரன் குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு நாடுகடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் விசாரணைகள் நடந்து முடிய இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பிடிக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
Average Rating