சமீராரெட்டியின் திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் ரகசியமாக நடந்தது
தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை ஆகிய படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி.
மும்பை வரவான இவரை, கௌதம்மேனன் இறக்குமதி செய்ததால் ஆரம்பத்திலிருந்தே மேல்தட்டு நடிகையாக வலம் வந்தார்.
ஆனால், வாரணம் ஆயிரம் படத்தை தவிர அவர் நடித்த எந்த படமும் ஓடவில்லை. அதோடு, தமிழில் மார்க்கெட் இல்லாதபோதும் சம்பள விசயத்தில் இறங்காமல் இருந்ததால், அதன்பிறகு சமீராவை யாரும் படங்களுக்காக புக் பண்ணவில்லை.
அதனால், தோல்வி முகத்துடன் மும்பைக்கு திரும்பிய அவர், சில படங்களில் நடித்து வந்தார். அந்த சமயத்தில் தொழிலதிபருடன் சமீரா ரெட்டிக்கு காதல் மலர்ந்திருப்பதாக பாலிவுட் ஊடகங்கள் பரபரப்பு செய்திகளை வெளியிட்டன.
ஆனால், வழக்கம்போல், யாருடனும் எனக்கு காதல் இல்லை. என் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் இப்படி வதந்தி பரப்பி விடுகிறார்கள் என்று மறுப்பு செய்தி வெளியிட்டார் சமீரா.
இந்த நிலையில், தற்போது இந்தியிலும் சுத்தமாக படங்கள் இல்லாததால், இத்தனை நாளும் திரைக்கு பின்னால் வைத்திருந்த தனது காதலரை வெளியே கொண்டு வந்து விட்ட சமீராவுக்கு சமீபத்தில் அவருடன் நிச்சயதார்த்தமும் நடந்தேறியுள்ளதாம்.
ஆனால், இந்த நிகழ்ச்சியை காதும் காதும் வைத்தார்போல் நடத்திய சமீரா, வருகிற ஏப்ரல் மாதம் அவரை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளாராம்.
சமீராவின் காதலர் பெயர் அக்ஷ்ய் வரதா. இவர் சொந்தமாக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஓராண்டுக்கு மேலாக இருவரும் காதலித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating