21 வயது இளைஞருக்கு எமனான சூதாட்டம்

Read Time:1 Minute, 29 Second

dead-body-001குருநாகல் குளியாபிடிய – பஹல கல்பொல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், பஹல கல்போல – இலுக்கேன பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் ஒருவரே பலியாகியுள்ளார்.

இவர் கூரிய ஆயுதம் மற்றும் பொல்லால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சூதாட்ட தொடர்பில் ஏற்பட்ட பணப் பிரச்சினை காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்..

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் காயமடைந்த நிலையில் பொலிஸ் பாதுகாப்புடன் குளியாபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும் உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை குளியாபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சமீராரெட்டியின் திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் ரகசியமாக நடந்தது
Next post தாக்குதலுக்கு உள்ளான வடமாகாண சபை பிரதி அவைத் தலைவர் விடுதலை