சகோதரியின் உதவியுடன், காதலியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த தம்பி
Read Time:1 Minute, 8 Second
திக்குவல்லை பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் 14 வயது மாணவி ஒருவரை 20 வயது இளைஞன் ஒருவன் தனது சகோதரியின் ஒத்துழைப்புடன் கடத்திச் சென்று மறைத்து வைத்திருந்ததாகவும் அவர் மீது பாலியல் வல்லுறவு கொண்டதற்காகவும் இளைஞனும் காதலியும் காதலியின் சகோதரியும் திக்குவல்லைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சிறுமி பொலிஸாரால் மாத்தறை வைத்தியசாலையில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார். குறித்த இளைஞரும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரியும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இது குறித்து விசாரணைகளை திக்குவல்லை, பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். காதலர்கள் தமகஸ்ஸார என்ற இடத்தில் காதலியின் அக்காவின் வீட்டில் வைத்தே கைது செய்யப்பட்டனர்.
Average Rating