சிசு எரித்துப் புதைப்பு; கள்ளக்காதலன் கைது

Read Time:1 Minute, 56 Second

child-002யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமல்சேகர தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கான வாராந்த மாநாடு இன்று யாழ். பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது. அதன் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 22ஆம் திகதி உரும்பிராய் பகுதியில் எரியூட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்ட சிசுவின் மரணம் தொடர்பில் குறித்த சிசுவை பிரசவித்தவரின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த பெண் ஏற்கனவே திருமணமாகி கணவர் வெளிநாட்டில் உள்ளார். இந்தநிலையில் வேறு ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பினாலேயே குழந்தையை பிரசவித்திருந்தார்.

எனவே குழந்தை பிறந்து சில மணிநேரத்திலேயே எரியூட்டப்பட்டு உரப்பையில் போட்டு வீட்டிற்கு சற்று தொலைவில் புதைக்கப்பட்டிருந்தது.

எனவே இது குறித்து சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சகோதரியின் உதவியுடன், காதலியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த தம்பி
Next post சாவகச்சேரியில் பெண் ஒருவரை, ஐவர் இணைந்து பாலியல் வல்லுறவு