விவேக்கிற்கு ‘பசுமை காவலர்’ விருது
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வேண்டுகோளுக்கினங’க நடிகர் விவேக் மரக்கன்றுகளை நாட்டி சமூக பணி செய்து வருகிறார்.
இதுவரையில் 21 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டி சாதனை படைத்துள்ளமையால் விவேக்கிற்கு ‘பசுமை காவலர்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள காஸ்மோ பாலிடன் கிளப்பில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவின் போதே இவருக்கு பசுமை காவலர்’ என்ற விருதை நீதிபதி ப.ஜோதிமணி வழங்கினார்.
நடிகர் விவேக் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் ”முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அன்பு வேண்டுகோளின்படி தமிழ்நாட்டில் மரக்கன்றுகளை நட்டு வருகிறேன்.
இதுவரை 21 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு முடித்துள்ளேன். 1 கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்று அப்துல்கலாம் கூறியிருக்கிறார்.
நான் மரக்கன்றுகளை நடுவதை ஊக்கப்படுத்தி தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர் நீதிபதி ப.ஜோதிமணி ‘பசுமை காவலர்’ விருது வழங்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும்உள்ளது மற்றும் இந்த விருது எனக்கு மேலும் ஊக்கமளிக்கின்றது’ எனவும் குறிப்பிட்டார்.
Average Rating