12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய முதியவர் கைது
Read Time:54 Second
பன்னிரண்டு வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி விட்டு ஐந்து வருடங்களாக தலைமறைவாகியிருந்த முதியவரொருவரை மாத்தறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2008 ஆண்டு ஜுன் மாதம் 24 ஆம் திகதி பாலட்டுவ ஆந்துவ பகுதியில் வீட்டில் தனிமையாக இருந்த 12 வயது சிறுமியை 63 வயதுடைய முதியவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்து விட்டு தலைமறைவாகியிருந்தார்.
குறித்த நபர் தொடர்பில் மாத்தறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே மேற்படி நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Average Rating