ஓட்டமாவடியில் மலைப்பாம்பு பிடிபட்டது
Read Time:52 Second
மட்டக்களப்பு, ஓட்டமாவடி- காவத்தமுனைக் கிராமத்தில் மலைப்பாம்பு ஒன்று உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஏழு அடி நீளமுள்ள மேற்படி பாம்பானது, ஆட்டு பட்டியொன்றில் நுழைந்து அங்கிருந்த ஆடொன்றை விழுங்கி கொண்டிருந்த நிலையில் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.
பட்டி உரிமையாளர்கள் பாம்பிடமிருந்து ஆட்டை மீட்ட போதும், ஆடு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பிடிபட்ட பாம்பினை கிராமத்தவர்கள் கட்டி வைத்துள்ளனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
Average Rating