காணாமல் போன 16 வயது சிறுமி, 9 தினங்களுக்குப் பின் வீடு திரும்பினார்..
Read Time:1 Minute, 26 Second
க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிவிட்டு காணாமல் போனதாக கருதப்பட்ட 16 வயது நிரம்பிய மாணவி ஒன்பது தினங்களுக்குப் பின் வீடு வந்துள்ள சம்பவம் மகியங்கனைப் பகுதியின் மாப்பாகடவெல என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவி பரீட்சைக்கு தோற்றி வீடு சென்று கொண்டிருந்த போதே இருவரினால் வேனொன்றில் கடத்தி பதுளை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
9 தினங்களுக்குப் பின் வேறு வேனில் கொண்டு செல்லப்பட்டு மாணவியின் வீட்டருகே இறக்கி விடப்பட்டுள்ளார்.
இது சம்மந்தமாக குறித்த மாணவி கருத்து தெரிவிக்கையில் தன்னை கடத்தியவர்கள் யார் என்பது தெரியாதென பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
மாணவி பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டுள்ளாரா என்று அறிவதற்காக மகியங்கனை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு .இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating