நடிகை ஆக்குவதாக ஏமாற்றி இளம்பெண்கள் கற்பழிப்பு: வாலிபர் கைது
கேரள மாநிலம் திருச்சூர் சேலக்கரை வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் சரத் என்ற அஜி (வயது 35).
சில ஆண்டுகள் குவைத் மற்றும் டெல்லியில் தங்கி வேலை பார்த்த வந்த இவர் பிறகு திருவனந்தபுரத்தில் சொகுசு லாட்ஜுயில் அறை எடுத்து வசித்து வந்தார். இண்டர்நெட், பேஸ்புக் மூலம் இவர் பெண்களுக்கு வலை விரித்து அவர்களது கற்பை சூறையாடியதாக ஏராளமான புகார்கள் இவர் மீது குவிந்தது.
மேலும் கேரள டி.ஜி.பி. யிடமும் ஏராளமான பெண்கள் புகார் செய்தனர்.
இதை தொடர்ந்து சைபர் கிரைம் குற்றங்களை விசாரிக்கும் ஷேடோ பிரிவு விசேஷ போலீசார் அஜியை கைது செய்ய தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள்.
இவர் செல்போன்களை உபயோகிக்காமல் இண்டர்நெட் இணைப்பு மூலம் போன் தொடர்பு கொண்டு பெண்களிடம் பேசி மோசடி செய்ததால் அவரை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில் ரகசிய தகவலின் பேரில் திருவனந்தபுரத்தில் அஜியை ஷேடோ போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
தன்னை தனியார் டெலிவிஷன் நிலைய ஊழியர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பல பெண்களிடம் அஜி பழகி உள்ளார். மேலும் அவர்களிடம் டெலிவிஷன் தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி ஆசைக்காட்டி அந்த பெண்களை கற்பழித்துள்ளார்.
மேலும் சில பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அவர்களிடமிருந்து நகை, பணத்தை பறித்துக்கொண்டு மாயமாகி உள்ளார்.
எர்ணாகுளம், கொட்டா ரக்கரா, நேமம், விழிஞ்ஞம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் இவரது வலையில் விழுந்து கற்பையும், நகை, பணத்தையும் பறி கொடுத்துள்ளனர்.
இந்த தகவல்கள் போலீஸ் விசாரணையில் வெளியானது. மேலும் அஜியிடம் இருந்து ஏராளமான பெண்களின் புகைப் படங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. பல புகைப் படங்களில் அவரும், சில பெண்களும் இணைந்து இருப்பது போல உள்ளது.
இது பற்றியும் போலீசார் அஜியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அஜி கைது செய்யப்பட்ட தகவல் பரவியதும், அவர் மீது மேலும் பல பெண்கள் புகார் கொடுத்து வருகிறார்கள். எனவே அஜியால் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றி போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
Average Rating