காசல்ரீ நீர்த்தேக்கத்தில் சீ.பிளேன்
தேசிய சுற்றுலா அபிவிருத்தியை முன்னெடுப்பதற்காக சீ பிளேன் ஒன்று இன்று பிற்பகல் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் தரையிரங்கியுள்ளது.
இலங்கையில் சுற்றுலா அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக மூவர் பயணிக்கக் கூடிய குறைந்தளவான நீரிலும், தரையிலும் இறங்கக்கூடிய fair என்ற பெயருடைய சீ பிளேன் பரிசோதனைக்காக இன்று பிற்பகல் காசல்ரீ நீர்தேக்கத்தில் இறங்கியுள்ளது.
அரச அனுமதி பெற்ற தனியார் நிறுவனம் ஒன்று குறித்த விமானத்தை இங்கு கொண்டு வந்துள்ளது.
பரிசோதனைக்காக இறக்கப்பட்ட இந்த விமானத்தை எந்த விதமான பிரச்சினைகளும் இன்றி நீரில் இறக்கியதாக விமானஓட்டி தெரிவித்தார்.
காசல்ரீ நீர்த்தேக்க பகுதியில் அரச அனுமதி பெற்ற பல விடுதிகள் இருப்பதனால் இந்த விமானம் அடிக்கடி காசலரீ நீர்தேக்கத்தில் இறக்குவதற்கு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சுற்றுலா பயணிகளுக்காக நுவரெலியா, கண்டி, கொக்கல, திஸ்ஸமகாராம போன்ற பிரதேசங்களுக்கு இந்த விமானம் செல்வதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
Average Rating