விபத்தில் சிக்கி இரண்டாகப் பிளந்த கார், உயிர்தப்பிய இருவர்
வீதி விபத்தொன்றில் சிக்கிய காரொன்று இரண்டாகப் பிளந்து சிதறியபோதிலும் அதில் பயணித்த சாரதியும் பயணி ஆச்சரியகரமாக உயிர் பிழைத்த சம்பவமொன்று இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்துச் சம்பவம் கடந்த கிறிஸ்மஸ் தினத்தன்று பகல் வேளையில் எஸெக்ஸில் இடம்பெற்றுள்ளது.
பாரிய வீதி சமிஞையுடன் மோதுண்ட கார் இரண்டாகப் பிளந்து சிதறியுள்ளது. இதில் முற்பகுதி பற்றைக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது.
ஆனால் இந்த பயங்கரமான விபத்தில் சிக்கிய கார் சாரதியும் அதிலிரந்த பயணியும் ஆச்சரியகரமாக சிறியவிலான காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற இடத்துக்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்துள்ளனர். இதன் போது விபத்தில் சிக்கிய இருவரும் சீரான நிலையில் முதலுதவி மட்டும் தேவையாக வீதியில் அமர்ந்திருந்துள்ளனர்.
வீதியை விட்டு விலகி வீதிச் சமிஞையில் மோதிய இரண்டாகப் பிளந்த காரிலிருந்து இருவரும் எவ்வாறு தப்பித்தனர் எனத் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Average Rating