மட்டக்களப்பு: பாம்பு தீண்டி சிறுவன் உயிரிழப்பு
Read Time:43 Second
மட்டக்களப்பு வெல்லாவெளிப் பிரதேசத்தில் இன்று காலை பாம்பு தீண்டி 12 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
வெல்லாவெளி, திக்கோடை கிராமத்தைச் சேர்ந்த இதயகுமார் வினோஜன் (வயது 12) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
விளையாடிக்கொண்டிருந்தபோதே இந்தச் சிறுவனை பாம்பு தீண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
Average Rating