ஹீரோயின் மாயம்.., ஷூட்டிங் நிறுத்தம்
ஷூட்டிங் புறப்பட தயாரான போது, ஹீரோயின் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.சிலந்தி படத்தில் வில்லனாக நடித்தவர் சந்துரு.
இவர், தனது பெயரை ராஜ ஷந்ரு என்று மாற்றி, மது மாது சூது என்ற படத்தை தயாரித்து, இயக்கி ஹீரோவாக நடிக்கிறார்.
இதில், பெங்களூர் மாடல் கேத்ரின் ஸ்ருதி லியோ ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஷூட்டிங் புறப்பட தயாராக இருந்த நேரத்தில் திடீரென்று மாயமாகி விட்டார்.
அவரை பட குழுவினர் தேடி வருகின்றனர். இதுபற்றி ராஜ ஷந்ரு கூறியதாவது: போதைக்கு அடிமையான ஒரு வாலிபனின் கதையை மையமாக வைத்து இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
ஹீரோயினாக நடிக்க கேத்ரின் ஸ்ருதி லியோ ஒப்பந்தம் ஆனார். இரு தினங்களுக்கு முன் திருப்பூரில் ஷூட்டிங் நடக்க இருந்தது. 2வது ஹீரோயின், கேமராமேன், உதவி இயக்குனர் உள்ளிட்டவர்கள் படப்பிடிப்புக்காக காத்திருந்தோம்.
கேத்ரின், குறும்படம் ஒன்றில் நடித்துவிட்டு அரை மணி நேரத்தில் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு போனார். ஆனால் 2 நாள் ஆகியும் திரும்பி வரவில்லை. இதுகுறித்து பெங்களுரில் உள்ள அவரது அம்மாவிடம் கேட்டபோது, கேத்ரின் தமிழ்நாட்டில் தான் வேறு ஷூட்டிங்கில் இருக்கிறார்.
அவரை வரச் சொல்கிறேன் என்றார். ஆனால் இன்று வரை அவர் வரவில்லை. இதனால் எங்கள் ஷூட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராஜ ஷந்ரு கூறினார்.
Average Rating