வாய்ச்சண்டை கைகலப்பாகியதில் இளைஞன் மரணம்
Read Time:1 Minute, 8 Second
கலஹா, தெல்தோட்டை பிரதேசத்தில் இருவருக்கிடையிலான மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
தலையில் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் தெல்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அந்நபர் உயிரிழந்துள்ளார்.
நேற்று முற்பகல் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தெல்தோட்டையைச் சேர்ந்த 24 வயதான ரவூப் மொஹமட் என்ற இளைஞன் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை நேற்று தெல்தோட்டை வைத்தியசாலையின் இடம்பெற்றதன் பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த கொலையுடன் தொடர்புடைய 42 வயதான சந்தேகநபர் கலஹா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நபர் இன்று கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Average Rating