தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன் கைது
Read Time:51 Second
மொதற, இப்பாகேவத்த பிரதேசத்தில் வீடொன்றின் நுழைவாயிலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நபர் நேற்று இரவு கொலை செய்யப்பட்டுள்ளார்.
40 வயதான இந்நபர் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நபர் குறித்த வீட்டில் தனித்து வசித்து வந்துள்ளார்.
உயிரிழந்தவருக்கும் அவரது அண்ணனுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளமையே இந்த கொலைக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் மொதற பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Average Rating