பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்கம் தங்கியிருந்த விடுதியில் இலங்கையரின் சடலம் மீட்பு
மாலைத்தீவு தலைநகர் மாலேவில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் இருந்து இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த விடுதியில் உலகின் பிரபல கால்பந்து வீரர் இங்கிலாந்தின் டேவின் பெக்கம் தனது குடும்பத்துடன் கிறிஸ்மஸ் விடுமுறை களித்து வந்ததாக மாலைத்தீவு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஹசன் ஹனீப் தெரிவித்துள்ளார்.
இலங்கை நபரின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர் எனவும் விருந்தினரோ பணியாளரோ இல்லை எனவும் தெரிவிக்கிப்படும் அதேவேளை, குறித்த விடுதியில் மற்றுமொரு பிரபல கால்பந்து வீரர் ரோமன் அப்ரமோவிச் என்பவரும் இருந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
பல வருடங்களின் பின் தனது மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளுடன் மாலைத்தீவுக்கு விஜயம் செய்துள்ள டேவிட் பெக்கம், சடலம் மீட்பு சம்பவத்தால் அதிருப்தி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating