வவுனியா சிறுவர் இல்ல துஷ்பிரயோக வழக்கு; சந்தேகநபர்கள் விடுதலை
Read Time:1 Minute, 0 Second
வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறுவர் இல்லத்தின் பொறுப்பாளரான தேரர் உள்ளிடட சந்தேகநபர்கள் தலா ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியதை அடுத்து மாவட்ட மேலதிக நீதிபதியும் நீதவானுமாகிய விநாயகமூர்த்தி இராமக்கமலனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலதிக வழக்கு விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Average Rating