விபத்தில் தாயும், சிசுவும் மரணம்

Read Time:1 Minute, 30 Second

dead-008ஆனையிறவுப் பகுதியில் ஏ – 9 வீதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ள விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இளம் தாயும் சிசுவும் மரணமடைந்துள்ள அதேவேளை, தந்தை காயமடைந்துள்ளார்.

புதுவருடத்தை முன்னிட்டு ஆனையிறவுப் பகுதியிலுள்ள தேவாலயம் ஒன்றுக்குச் சென்று வழிபாடுகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே, இவர்கள் விபத்திற்கு உள்ளானார்கள்.

இவர்கள் வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த டிப்பர் வாகனம் ஒன்று இவர்கள் மீது மோதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கொம்பன் பூநகரி பகுதியைச் சேர்ந்த செந்தூரன் சுலோகினி (வயது 22), செந்தூரன் கின்சிலி (பிறந்து 27 நாட்கள்) ஆகியோரே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த கணவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்துத் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் எண்ணெய் ஏற்றிச் சென்ற புகையிரதம் தடம் புரண்டதால் தீ அனர்த்தம்
Next post விபச்சார விடுதி முற்றுகை: 6 பெண்கள் உட்பட எண்மர் கைது