பாலியல் வழக்கில் அமெரிக்கருக்கு 445ஆண்டுகள் சிறைத்தண்டனை

Read Time:1 Minute, 39 Second

us_egalஇரண்டு பெண்களை கொலை செய்ததுடன், தனது 3 மகளையும் 15வருடங்களுக்கு மேலாக பாலியல் பலாத்காரம் செய்த அமெரிக்கருக்கு 445 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் க்ளீவ்லாந்து பகுதியைச் சேர்ந்தவர் இலியாஸ் அசிவிடோ(49). இவரது மீது 2 பெண்களை கொலை செய்தது, குழந்தைகளை அடித்து தாக்கியதுடன் பாலியல் பலாத்காரம் செய்தது உள்ளிட்ட 297 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அசிவிடோ, 1993ம் ஆண்டு தனது மனைவியின் சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் தனது 3 மகள்களையும் பல ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி வந்துள்ளார்.

மேலும் 1994ம் ஆண் தனது பக்கத்து வீட்டுக்காரரான பமீலா என்பவரையும், 1995ம் ஆண்டு கர்ப்பிணி பெண்ணாக இருந்த 18 வயது கிறிஸ்டினா அட்கின்ஸ் என்பவரையும் கொலை செய்துள்ளார்.

தனது குற்றங்களை ஒப்புக் கொண்ட அசிவிடோவிற்கு இரட்டை கொலைக்காக இரண்டு 20 ஆண்டுகள் ஆயுள் தண்டனை உள்ளிட்ட மற்ற குற்றங்களுக்காக என 445 ஆண்டுகள் வெளியில் வர முடியாத சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபச்சார விடுதி முற்றுகை: 6 பெண்கள் உட்பட எண்மர் கைது
Next post கணவருக்கு சாப்பிட தெரியாததால் விவாகரத்து