இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நடிகை சுருதிஹாசன்

Read Time:1 Minute, 43 Second

suruthiநடிகை சுருதிஹாசன் மீது இரு மாதங்களுக்கு முன் தாக்குதல் நடந்தது. கதவை தட்டி வீட்டுக்குள் புகுந்து மர்ம மனிதன் தாக்கினான்.

போலீசார் விசாரணை நடத்தி அவனை அடையாளம் கண்டு கைது செய்தனர். இதையடுத்து சுருதி ஹாசன் அங்கு பாதுகாப்பு இல்லை என்று கருதி மும்பையில் வசிக்கும் தனது தாய் சரிகாவுடன் தங்கிக் கொள்ளப் போவதாக கூறப்பட்டது.

பாதுகாப்புக்கு தனியார் பாதுகாவலர்களையும் நியமித்து உள்ளாராம். சுருதிஹாசன் கூறியதாவது:–

எனக்கு நடந்த சம்பவம் மாதிரி நிறைய நடக்கிறது. தனியாக வாழும் பெண்கள் இது போன்ற கஷ்டங்களை சந்திக்கிறார்கள். இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாகவே உள்ளது.

நடந்த சம்பவத்துக்கு பிறகு நான் பயந்துவிட்டேன். இப்போதுதான் அதில் இருந்து மீண்டு வருகிறேன். நிறைய பேர் தனியாக இருக்காதே என்று வற்புறுத்துகிறார்கள். எனக்கு இஷ்டம் இல்லை, இந்த சம்பவத்துக்காக பயந்து ஓடுவது சரியல்ல.

இனிமேல் எச்சரிக்கையாக இருப்பேன். இந்தி, தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறேன். தமிழில் நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன். இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவருக்கு சாப்பிட தெரியாததால் விவாகரத்து
Next post வன்னியில் கே.பி.யின் பரிசு…