வன்னியில் கே.பி.யின் பரிசு…
Read Time:1 Minute, 14 Second
வன்னியில் உள்ள சிறுவர் இல்லங்களினுடைய சிறுவர்களின் புதுவருட விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்வுகளும் நேற்று நடைபெற்றன.
இவற்றில் முள்ளியவளை பாரதி இல்லம், முத்தையன்கட்டு அன்பு இல்லம், கிளிநொச்சி செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆகியவற்றின் சிறுவர்கள் பங்குபற்றியிருந்தனர். இவற்றில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய சிறுவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், விருந்தினர்களாக நேட்டோ நிறுவனத் தலைவர் செ.பத்மநாதன் (கே.பி.), முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ம.கணேசராஜா, ஒட்டுசுட்டான் பிரதேச சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் எஸ்.இந்திரகுமார், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆசிரியர் எஸ்.ரி.குமரன், மானிப்பாய் இந்துக்கல்லூரி ஆசிரியர் எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
Average Rating