வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தினால் பொருளாதார தடை : ஜப்பான்
Read Time:1 Minute, 17 Second
வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தினால் அதன் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று ஜப்பான் எச்சரிக்கை விடுத்துள்ளது. வட கொரியா ஏவுகணை சோதனை நடத்த ஆயத்தமாகி வருவதாக அந்நாட்டு தொலைக்காட்சியில் செய்தி வெளியாகியுள்ள நிலையில் ஜப்பான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வட கொரியா ஏவுகணை சோதனை நடத்துவதை கடுமையாக எதிர்ப்போம். அவ்வாறு சோதனை நடத்தப்பட்டால் எங்களது பதில் நடவடிக்கை கடுமையாக இருக்கும். இந்த விஷயத்தை ஜ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கும் கொண்டு செல்வோம் என்று ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தினால் அதன் மீது பொருளாதார தடை விதிக்க உடனடியாக தேவையான நடவடிக்கை மேற்கொள்வோம் என்றும் ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.