பிரதமரின் மகனிடம் பொலிஸார் தீவிர விசாரணை
Read Time:1 Minute, 21 Second
பிரதமர் டி.எம். ஜயரட்னவின் மகன் அனுராத ஜயரட்னவிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் மீட்கப்பட்ட பாரியளவிலான ஹெரோயின் அடங்கிய கொள்கலன் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது, இரண்டரை மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போதைப் பொருள் தடுப்புப் பொலிஸ் பிரிவினர் இந்த விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
அனுராத ஜயரட்னவின் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கு போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்படும் பாகிஸ்தானியர் பணம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, போதைப் பொருள் வர்த்தகர் ஒருவர் பிரதமருடன் இருந்து புகைப்படம் எடுத்துக் கொண்டமை தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
ஹெரோயின் கொள்கலனை விடுவிப்பதற்கு கடிதம் அனுப்பி வைத்தமை தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating