யாழ்ப்பாணத்தில் தெய்வத்திற்கு பயந்த திருடர்கள்

Read Time:1 Minute, 11 Second

stolen-011யாழ்ப்பாணம், மல்லாகம் பெரியதம்பிரான் ஆலயத்தில் 2011ஆம் ஆண்டு காணாமல் போன 32 பவுண் தங்க நகைகள் மூன்று வருடங்களுக்கு பின்னர் ஆலயத்திற்குள் கொண்டுவந்து நேற்று போடப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.

2011 ஆம் ஆண்டு மேற்படி ஆலயத்திற்குள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த 32 பவுண் தங்க நகைகளைத் திருடிச் சென்றுவிட்டதாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆலயத்திற்கு நேற்றுக் காலை பூசைகளை செய்வதற்கு சென்ற பூசகர் ஆலய உள்வீதியில் தகரப்பேணியொன்று இருந்ததை அவதானித்தார்.

இது தொடர்பாக ஆலய பரிபாலன சபையினரின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து அவர்கள் தெல்லிப்பழை பொலிஸில் முறையிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவுதியில் மேலும் சில இலங்கையர்கள் நிர்க்கதி
Next post இனம் காணப்படவேண்டிய போலி இணைய தளங்கள்…!