யாழில் பிடிபட்டது ஆவா ரவுடிக் கும்பல்; வாள்களும் மீட்பு

Read Time:2 Minute, 17 Second

knife-04பாரிய வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 6பேர் நேற்று அச்சுவேலி மற்றும் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுமக்கள் வழங்கிய இரகசிய தகவலின் படி அச்சுவேலிப் பொலிஸாரினால் நேற்று இரவு 3பேர் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல் கோப்பாய் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய 3பேரை கோப்பாய் பொலிஸார் நேற்று இரவு 9 மணியளவில் கைது செய்தனர்.

இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து குறித்த மூவருக்கும் அச்சுவேலியில் கைதாகிய மூவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் இவர்கள் வாள் வெட்டு சம்பவங்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள் எனவும் தெரியவந்தது.

எனினும் குறித்த நபர்கள் ஆவா என்ற வாள்வெட்டு குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் குழுத்தலைவனான ஆவா என்பவரும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை மூன்று பொலிஸ் விசேடகுழுக்கள் மேற்கொண்டு வருவதுடன் இச்சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 2ஆம் திகதி அச்சுவேலி செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதாகவும் வாள் வெட்டிற்கு இலக்காகியவர்களை வைத்தியசாலைக்கு ஏற்றிவந்தவரது வாகனமும் குறித்த நபர்களால் அடித்து சேதமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (வீடியோ) நாம் சொன்னதைக் கேட்டிருந்தால், இன்று பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார்.. -ப.சிதம்பரம்
Next post பிரித்தானியாவில் வெள்ளம்