பந்தய பணத்திற்காக ‘நிர்வாண ரேஸ்’: பாகிஸ்தானில் 6 வாலிபர்கள் கைது

Read Time:1 Minute, 38 Second

sex.woman20 ஆயிரம் ரூபாய் பந்தய பணத்திற்காக பட்டப்பகலில் நிர்வாணமாக ஓடிய 6 வாலிபர்களை பாகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.

லாகூரில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஞ்சாப் மாகாணம், கோராலி பகுதியை சேர்ந்த 6 வாலிபர்கள் பக்கத்தில் உள்ள நாட் கிராமம் வரை நேற்று மாலை நிர்வாணமாக ஓடுவது என்று பந்தயம் கட்டினர்.

நாட் கிராமத்தை யார் முதலில் சென்றடைகிறார்களோ..? அவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் பரிசு என அவர்களுக்குள் முடிவு செய்யப்பட்டது. பரிசு தொகையை வெல்லும் ஆர்வத்தில் அவர்கள் அனைவரும் ஆடைகளை களைந்துப் போட்டு விட்டு வீதிகள் வழியாக நிர்வாண கோலத்தில் தலை தெறிக்க ஓடினர்.

இதனை கண்ட அப்பகுதி பெரியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களில் சிலர் கோராலி போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் அவர்கள் அனைவரையும் நிர்வாண நிலையிலேயே கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று, வழக்குப் பதிவு செய்தனர்.

பந்தயப் பணம் 20 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தெலுங்கு நடிகர் உதய்கிரண் தற்கொலை
Next post ஆபாச வீடியோ: மஹியங்கனை கான்ஸ்டபிள் கைது