கனடாவில் துருவப் பகுதிகளில் இரவு நேரத்தில் அதிர வைத்த சத்தங்களால் பரபரப்பு
Read Time:1 Minute, 5 Second
கனடாவில் நிலவும் கடும் குளிர் காலநிலையின் விளைவாக ரொரன்டோ முதல் ஒன்டாரியோ வரையான பிராந்தியத்தில் வீடுகள் இடிந்து விழுவது போன்றும் துப்பாகிகளில் வேட்டுகள் தீர்க்கப்படுவது போன்றும் பாரிய சத்தங்கள் இரவு முழுவதும் கேட்ட வண்ணம் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தகைய சத்தங்கள் ஏற்படுவது பனிப்பாறைகள் நிறைந்த துருவப் பகுதிகளிலேயே வழமையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மண்ணினூடாக செல்லும் மழை நீரும் பனியும் மிகவும் தாழ்ந்த வெப்பநிலை காரணமாக உறைநிலையை அடைகையிலேயே இவ்வாறு பாரிய சத்தங்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
Average Rating