மலசலகூடத்தில் வீடியோ கமரா பொருத்திய, வைத்தியருக்கு பிணை
Read Time:1 Minute, 0 Second
அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பெண்கள் மலசலகூடத்தில் வீடியோ கமரா பொருத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வைத்தியர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் இன்று அநுராதபுரம் நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி ருவந்திகா மாரபன முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.
25,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 2 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் சந்தேபநபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் மே மாதம் 12ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு வைத்தியருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Average Rating