பெற்ற தந்தையை கல்லால் அடித்துக் கொன்ற, மனநோயாளி தலைமறைவு!

Read Time:2 Minute, 7 Second

dead.body-02உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பரவ்லி பகுதியை சேர்ந்தவர் ஷியாம் மனோகர் (55). தச்சுத் தொழிலாளியான இவரது மகன் திப்பு என்பவர் இளம் வயதில் இருந்தே மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

பலரிடம் வைத்தியம் பார்த்தும் பலனில்லாததால் தற்போது 30 வயது வாலிபரான திப்புவை சிறுவனை பாதுகாப்பதை போல் அவரது தந்தை ஷியாம் மனோகர் பொத்தி பொத்தி வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று தந்தையுடன் கோபித்துக் கொண்டு வெளியே சென்ற திப்பு மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

பதறிப்போன தந்தை மகனை ஊர் முழுக்க தேடி அலைந்தார். அப்போது சிலர் திப்பு ஒரு மரத்தின் உச்சியில் ஏறி அமர்ந்துள்ளதாக அவரிடம் தெரிவித்தனர்.

அந்த மரத்தின் அருகே சென்ற ஷியாம் மனோகர் கீழே இறங்கி வரும்படி மகனிடம் கெஞ்சினார்.

நீண்ட நேரத்திற்கு பிறகு கீழே இறங்கிவந்த திப்புவை ‘வீட்டுக்கு போகலாம் வா’ என்று அவர் பாசத்துடன் அழைத்தார்.

ஆத்திரமடைந்த திப்பு கீழே குவிந்து கிடந்த செங்கற்களை எடுத்து சரமாரியாக தந்தையை அடித்தே கொன்றார்.

ஷியாம் மனோகர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்ட உள்ளூர் வாசிகள் இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் மன நோயாளி திப்புவை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டக்களப்பு: 15 அடி நீள முதலையினைப் பிடித்து மீண்டும் வாவியில் விட்ட அதிகாரிகள்
Next post ஈ.பி.டி.பி.யின் காரைநகர் பொறுப்பாளருக்கு, எதிரான முறைப்பாடு வாபஸ்!!