ரயில் மிதிபலகையில் பயணித்த, இளைஞர் கீழே வீழ்ந்து மரணம்!
Read Time:1 Minute, 10 Second
அஹூங்கல்லை, பலப்பிட்டிய புகையிரத நிலையத்துக்கு அருகில் ரயிலிலிருந்து கீழே தவறி வீழ்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
26 வயதான நிட்டம்புவ பிரதேசத்தைச் சேரந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞர் கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலின் மிதிபலகையிலிருந்து கீழே இவர் வீழ்ந்துள்ளதுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பலத்த காயத்துக்குள்ளன இந்த இளைஞர் கராப்பிட்டிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கராப்பிட்டிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை இடம்பெறவிருந்தது.
Average Rating