ஈ.பி.டி.பி.யின் காரைநகர் பொறுப்பாளருக்கு, எதிரான முறைப்பாடு வாபஸ்!!
Read Time:1 Minute, 3 Second
காரைநகர் பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக செயற்பட்ட முறைப்பாடு பொலீஸ் நிலையத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பிரதேச சபை தலைவர் ஆனைமுகனை தொலைபேசியில் மிரட்டியதாக இவர் மீது முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்விடயம் விசாரணைக்கு வந்தபோது பொலீசாரின் தலையீட்டுடன் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இருவரும் சமரசம் செய்ய சம்மதித்தனர்.
கடந்த டிசம்பர் 29ஆம் திகதி மாலை தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஈ.பி.டி.பி.யின் காரைநகர் பொறுப்பாளர் கண்ணன், சுட்டுக் கொன்று விடுவேன் என மிரட்டியதாக மறுநாள் ஆனைமுகன் பொலீசில் புகார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating