வர்த்தகரைக் காணவில்லை என முறைப்பாடு
Read Time:1 Minute, 10 Second
கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த சங்கரலிங்கம் (வயது 52) என்ற வர்த்தகரை நேற்று மதியத்திலிருந்து காணவில்லை என அவரது மனைவி, கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு, மெயின் ஸ்ரிட் பகுதியில் இறக்குமதி வியாபரத்தில் ஈடுபட்டு வந்த சங்கரலிங்கம், வங்கியில் பணம் வைப்பிலிடுவதற்காக நேற்று மதியம் சென்றதாகவும், அதன் பின்னர் அவர் எங்கு சென்றார் என தெரிவில்லை எனவும் அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இச்சம்பவம் தொடர்பில், குறித்த வர்த்தகர் கடத்தப்பட்டாரா? என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Average Rating