குருணாகல் குப்பைத் தொட்டிக்குள் ஆண் சிசுவின் சடலம்!

Read Time:1 Minute, 39 Second

36901கொலை செய்யப்பட்டு குருநாகலை பஸ் நிலையத்திலுள்ள குப்பைத் தொட்டிக்குள் போடப்பட்டிருந்த பிறந்து ஒரு வாரமான குழுந்தையொன்றின் சடலத்தை குருணாகல் மாநகர சபையைச் சேர்ந்த இரு பெண் தொழிலாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

குருணாகல் பஸ் நிலையத்திலுள்ள குப்பை தொட்டியை பெண் தொழிலாளர்கள் குப்பை முகாமைத்துவ நிலையத்துக்கு எடுத்து வந்து அதிலுள்ள குப்பையை அகற்றும் போது இந்த ஒருவார குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக குருணாகல் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கண்டெடுக்கப்பட்டது ஒரு வாரமான ஆண் குழந்தையின் சடலமென பொலிஸார் தெரிவிக்கின்றனர். குருணாகல் நகரின் வேறொரு இடத்தில் குழந்தையை பெற்றெடுத்து பின்னர் கொலை செய்து இந்த குப்பை தொட்டியில் கொண்டுவந்து போட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குழந்தையின் சடலம் வைத்திய பரிசோதனைகளுக்காக குருணாகல் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வர்த்தகரைக் காணவில்லை என முறைப்பாடு
Next post போலந்தைச் சேர்ந்த சாகசக் கலைஞர், கேசத்தால் காரை இழுத்து சாதனை