ஆவா’ குழுவினருக்கு விளக்கமறியல்

Read Time:1 Minute, 28 Second

aavaaயாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களென கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட ‘ஆவா’ குழுவினரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் பரவலாக இடம்பெற்ற கொலை கொள்ளை உள்ளிட்ட சட்டவிரோத சம்பவங்களுடன் தொடர்புடைய 9பேர் கொண்ட ‘ஆவா’ குழு நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு கைக்குண்டுகள், 12 வாள்கள், 6 மோட்டார் சைக்கிள்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட இந்தக் குழுவினர், நேற்று மாலை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார் என்று கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்சீவ ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விமானத்தில் அழுகையை நிறுத்தாததால் கைக்குழந்தைக்கு அடி-உதை
Next post இங்கிலாந்தில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள திருமண மோதிரத்தை விழுங்கிய நாய்