24 வயது காதலனுடன் ஓடிவந்த 44 வயது மராத்தி துணை நடிகை

Read Time:4 Minute, 37 Second

00424 வயது காதலனுடன் ஓடிவந்த 44 வயது துணை நடிகை சென்னையில் மீட்கப்பட்டார். மும்பையில் தானே பகுதியைச் சேர்ந்தவர் அல்கா புனேவர். மராத்தி துணை நடிகை யான இவர் சில இந்தி, மராத்தி படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். இவர் மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.

இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இவரது கணவர் சஞ்சய். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இவர் காரில் சென்றார். அவரது டிரைவர் காரை ஓட்டி சென்றுள்ளார். இதற்குப் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. திடீரென அவர் மாயமானார். 2 நாள்களுக்குப் பிறகு இவரது கணவர் சஞ்சய் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் இவரை தீவிரமாகத் தேடியபோது, நடிகை அல்காவின் கார் புனே_ மும்பை நெடுஞ்சாலையில் கேட்பாரற்று நின்றது. இந்த காரை மீட்ட போலீஸார் காருக்குள் சோதனை நடத்தினர்.

அப்போது நடிகை அல்காவின் செல் போன் போலீஸாரிடம் சிக்கியது. ஆனால் அல்கா எங்கு சென்றார் என்பது பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை. செல்போனை சோதனையிட்டதில் நடிகை அல்கா, அலோக்பாலிவால், சஞ்சய்குமார் சோன் ஆகியோரிடம் நீண்ட நேரம் பேசியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தானே போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அவர்கள் இருவரும் அல்காவின் நண்பர்கள் என்பதும் தெரிய வந்தது.

44 வயதான அல்காவுக்கு பல ஆண் நண்பர்கள் இருந்துள்ளனர். இதில் சஞ்சய்குமார் கோன்கர் என்பவர் அல்காவின் முன்னாள் நண்பர் ஆவார். இவருக்குப் பி றகு அலோக்பாலிவாலுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அலோக்பாலிவாலுக்கு 24 வயதாகிறது.

எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் மும்பையில் சாப்ட்வேர் என்ஜீனியராக உள்ளார். இவருடன் நடிகை அல்கா கடந்த ஓராண்டுகாலமாக நெருங்கிப் பழகி வந்துள்ளார். இதை அறிந்த அல்காவின் கணவர் இதை கண்டித்தார். ஆனால் எதிர்ப்பை மீறி இவர் காதலனை திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார்.

கணவரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ய வேண்டும் என்று அல்கா கருதியதால் கணவரின் கவனத்தை திசை திருப்ப இருவரும் முடிவு செய்தனர். அதன்படி திட்டமிட்டு, முன்னாள் நண்பர் சஞ்சய் குமார் உதவியை நாடினார் அல்கா. தானேயில் ஒரு வீட்டில் அவர்கள் இருவரையும் அடைத்து வைத்து கொலை செய்துள்ளனர் என்று நம்பும் வகையில் நாடகம் ஆடியுள்ளனர். இதனால் போலீஸார் குழப்பம் அடைந்தனர். இவர்களைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அல்காவின் முன்னாள் காதலன் தானேயில் போலீஸாரிடம் சிக்கினார். அவரை போலீஸார் முறைப்படி விசாரித்தனர். அப்போது நடிகை அல்காவையும், அவரது காதலன் அலோக் பாலிவாலையும் காரில் ஏற்றித் தப்பிக் செய்து நாடகமாடியது அம்பலமானது. இதையடுத்து போலீஸார் அவரைக் கைது சய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் நடிகை அல்கா தனது காதலனுடன் சென்னையில் தங்கி இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து தானே போலீஸார் சென்னைக்கு வந்து அல்காவை மீட்டனர். பின்னர் அவரது காதலனும் பிடிபட்டார். அவர்கள் இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். நடிகை அல்கா உயிருடன் இருப்பது எங்களுக்கு நிம்மதி அளிக்கிறது. விசாரணை முடிவில் உண்மை தெரிய வரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புத்தளம் குளத்திலிருந்து சடலம் மீட்பு
Next post ஓமன் நாட்டில் இந்திய வாலிபர் சாவில் மர்மம்