ஓமன் நாட்டில் இந்திய வாலிபர் சாவில் மர்மம்

Read Time:1 Minute, 19 Second

5dd67673-b5b9-4330-96b7-b5569f57c37c_S_secvpfஅரபு நாடான ஓமனில் வசித்து வந்தவர் அனில் குமார் (வயது 38). இந்தியர். இவர் கடந்த 30–ந்தேதி தான் தங்கியிருந்த இடத்தில் கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

ஆனால் இதை அவரது நெருங்கிய உறவினர் பிரசாத் ஏற்கவில்லை. இதுகுறித்து அங்குள்ள இந்திய தூதரகத்தை பிரசாத் நாடி உள்ளார். தனது உறவினர் அனில் குமார் கழுத்து நரம்பை வெட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார் என்று கூறுவதை ஏற்க இயலாது,

அவர் சாவில் மர்மம் உள்ளது, அவர் தற்கொலை செய்து கொள்ள காரணமே இல்லை என்று புகார் கூறி உள்ளார். பிரசாத்தின் சகோதரியைத்தான் அனில் குமார் திருமணம் செய்துகொண்டிருந்தார்.

அனில்குமாருடன் தங்கி இருந்தவரை போலீசார் பிடித்து விசாரித்து விட்டு பின்னர் விடுவித்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 24 வயது காதலனுடன் ஓடிவந்த 44 வயது மராத்தி துணை நடிகை
Next post சினேகிதியின் அழகில் பொறாமை கொண்டு ஆசிட்டை ஊற்றிய தோழி