முதல் முறையாக அங்கஜன் சபைக்கு வருகை
Read Time:52 Second
வடமாகாண சபையின் எதிர்கட்சி உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சபை அமர்விற்கு இன்றைய தினம் முதன்முறையாக கலந்து கொண்டார்.
வடமாகாண சபையின் அமர்வு இன்று கைதடியில் அமைந்துள்ள சபைக் கட்டடத்தில் நடைபெற்றது.
அதன்படி சபை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து கடந்த அமர்வுவரை அங்கஜன் விடுமுறை வழங்குமாறு சபைக்கு அனுமதி கோரியிருந்தார். அதற்கு சபையும் அனுமதி வழங்கியிருந்தது.
இன்றையதினம் முதன்முறையாக சபை அமர்வுக்கு அங்கஜன் கலந்து கொண்டிருந்ததுடன் தனது கன்னியுரையினையும் ஆற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating