மாணவிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்
அஹங்கம பிரதேசத்தில் சிங்கள மொழி போதிக்கும் தனியார் வகுப்பு ஆசிரியரொருவர் வகுப்புக்கு வரும் 13வயது மாணவியொருவரை பலாத்காரமாக வீடொன்றுக்கு இழுத்துச் சென்று சப்தமிட்டால் கொன்று விடுவேன் என துப்பாக்கியைப் போன்ற ஒன்றைக் காண்பித்து பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மாணவி அஹங்கம, பியதிகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். அவர் கடந்த 6 ஆம் திகதி மாலை இந்த தனியார் வகுப்பு ஆசிரியரின் சிங்கள வகுப்புக்குச் சென்றுள்ளார்.
வகுப்புக்குச் சென்று மாணவி வீடு திரும்பிக் கொண்டிருந்த போது தனியார் வகுப்பு ஆசிரியர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.
கேள்வித்தாளைப் பார்க்க வரும்படியும் வீட்டில் மேலும் பல மாணவிகள் இருப்பதாகவும் தெரிவித்து மாணவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளார்.
இலந்துவ பிரதேச வீடொன்றுக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர் அந்த வீட்டில் ஒரு மாணவி இருப்பதாகவும் அவரை அழைத்து வரும்படி மாணவியிடம் கூறியுள்ளார்.
மாணவி அந்த வீட்டுக்கு சென்றபோது அவரை பின் தொடர்ந்த ஆசிரியர் மாணவியை பலாத்காரமாக வீட்டுக்குள் இழுத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Average Rating