தேசத்துரோக செயலில் ஈடுபடும் யாழ்., மன்னார் ஆயர்களை கைது செய்யவும்: பொதுபலசேனா
தேசத்துரோக செயலில் ஈடுபடும் மன்னார் மற்றும் யாழ். கத்தோலிக்க ஆயர்களை உடனடியாக கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்இ தமிழ் -சிங்கள மக்களின் ஒற்றுமையை சீர் குலைக்கும் இந்த ஆயர்களின் சதியை தமிழ் இந்துத் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றும் தேரர் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவம் மக்கள் மீது இரசாயன ஆயுத தாக்குதல், கொத்து குண்டுகளை போட்டனரென்றும் எனவே சர்வதேச விசாரணை தேவையென்றும் அமெரிக்க விசேட பிரதிநிதி ஸ் ரீபன் ரெப்பிடம் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் மற்றும் யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆகியோர் தெரிவித்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்தார்.
தேரர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் தமிழ் இந்து சமூகத்தினர் நூற்றுக்கு 95வீதம் வாழ்கின்றனர். அதில் வடித்தெடுத்த சிறுதொகை தமிழ் மக்கள் தான் கத்தோலிக்கர்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர்.
அவ்வாறானதோர் நிலையில் இந்த இரண்டு ஆயர்களும் மேற்குல நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப பிரபாகரன் இருந்த காலத்திலும் இன்றும் தமது நடவடிக்கைகளை கைவிடாது முன்னெடுத்து வருகின்றனர்.
எமது இராணுவத்தினர் கொடுமையான புலி பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மனிதாபிமான அடிப்படையிலேயே யுத்தத்தை முன்னெடுத்து மக்களை பாதுகாத்தனர்.
யுத்தத்தின் போது சில இழப்பீடுகள் ஏற்படலாம் அது இயற்கை. ஆனால் இந்த ஆயர்களின் குற்றச்சாட்டுகள் போன்று எமது படையினர் நடந்து கொள்ளவில்லை.
ஒன்றுபட்ட இலங்கையை, மக்களை மீண்டும் பிளவுபடுத்த இவர்கள் இருவரும் முயற்சிக்கின்றனர். இங்கு பிரிவினையை ஏற்படுத்துவதே இவர்களின் இலக்காகும்.
அதனை அடைவதற்காக மேற்குலகத்தினருக்கு பொய்யான தகவல்களை வழங்குகின்றனர். இதனை தமிழ் இந்துத் தலைவர்கள் புரிந்து கொண்டு தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
அதைவிடுத்து பிரிவினைவாத ஆயர்களின் பொறியில் சிக்கலாகாது. இலங்கைக்கு எதி ராகவும் பிரிவினைவாதத்திற்கும் துணை போகும் மன்னார், யாழ். ஆயர்களை கைது செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
Average Rating