ஜப்பான் இரசாயனத் தொழிற்சாலையில் வெடிப்பு : ஐவர் பலி, 17 பேர் காயம்
Read Time:44 Second
ஜப்பானிலுள்ள இரசாயனத் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தால் 5 பேர் பலியாகியுள்ளதுடன் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
டோக்கியோ நகரிலிருந்து சுமார் 350 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள இரசாயனத் தொழிற்சாலையில் இன்று இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஐதரசன் வாயுக்களின் தாக்கங்களினால் இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Average Rating