யாழ். இரு மகள்களை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு விளக்கமறியல்
தனது இரு மகள்களையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபரான தந்தை ஒருவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
யாழ். அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய குடும்பஸ்தரே தனது 13, 14 வயதுடைய இரு மகள்களையும் பாலியல் துஷ்பிரயோகம் உட்படுத்திய குற்றச்சாட்டில் நேற்று தெல்லிப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து எங்கள் தந்தை எங்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வருவதாக குறித்த சிறுமிகள் தெல்லிப்பளை சிறுவர் நன்நடத்தைப் பிரிவிற்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பியிருந்தனர்.
தெல்லிப்பளை சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் ரி.திருமாறன் இது தொடர்பாக பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து, குறித்த சந்தேக நபரர் தெல்லிப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், மேற்படி நபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், பாதிப்புக்குள்ளான சிறுமிகளை யாழ். போதனா வைத்தியாசலையில் அனுமதிப்பதுடன் அவர்கள் தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையினை பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Average Rating