கண்டியில் 3 பிள்ளைகளை வீதியில் தவிக்க விட்டுச்சென்ற தந்தை

Read Time:1 Minute, 33 Second

questioகண்டியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றுக்கு அருகில் தனது பிள்ளைகள் மூவரை விட்டுச் சென்ற தந்தையைத் தேடி கண்டி பொலிஸின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

14 மற்றும் 12 வயதான இரு ஆண் பிள்ளைகள் மற்றும் 7 வயதான ஒரு பெண் பிள்ளையுமே இவ்வாறு விட்டுச் செல்லப்பட்டுள்ளன.

கண்டி நகரிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவத்தின் மூலமே குறித்த நபரின் மனைவி வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்.

இந்தநிலையில் நேற்று குறித்த பகுதிக்கு வந்த அவர் தனது மூன்று பிள்ளைகளையும் விட்டுவிட்டு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவன அதிகாரிகள், பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து மூன்று சிறுவர்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டனர்.

குறித்த மூன்று சிறுவர்களையும் கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ். இரு மகள்களை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு விளக்கமறியல்
Next post பாகிஸ்தானில் 17 லட்சம் ரூபாயை ரோட்டில் போட்டு எரித்த சகோதரிகள்