ஹம்பாந்தோட்டை மயில்களால் விமானம் சேதம்
Read Time:56 Second
ஹம்பாந்தோட்டை, மத்தல சர்வதேச விமான நிலையத்தில் டுபாய் விமானமொன்றை மயில்கள் சேதப்படுத்திவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து விமானம் தற்காலிகமாக தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றது.
பயணிகளுடன் புறப்பட்ட டுபாய் எயார் லைன்ஸ் விமானத்தின் இயந்திரத்தை ஆகக்குறைந்து இரண்டு மயில்கள் சேதப்படுத்திவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டு பயணிகள் ஹோட்டல்களுக்கு மாற்றப்பட்டு மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Average Rating