பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய மூவரில் ஒருவர் கைது
Read Time:1 Minute, 26 Second
சிலாபம், கரவிடாகாரய பகுதியில் நேற்று சிறுமி ஒருவரை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி 15 வயதுடைய பாடசாலை மாணவி எனவும் மேற்படி சிறுமி மாவு இடிப்பதற்கு தமது உறவினர் ஒருவரது வீட்டிற்குச் சென்று குளக்கரையாக வீடு திரும்பிய வேளையில் வழியில் சிறுமியின் மாமிமகனும் சிறிய தந்தையின் மகனுமாக மூவர் சேர்ந்து சிறுமியை காட்டுப் பகுதிக்குள் இழுத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஒருவார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றைய இருவரும் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாகவும் தெரிவிக்கின்றனர்.
Average Rating