புலிகளுக்கு எதிரான போரில், கொத்தணி குண்டுகளை பயன்படுத்துமாறு கோரிய அமெரிக்கா!
புலிகளுக்கு எதிரான போரில் கொத்தணிக் குண்டுகளைப் பாவிக்குமாறு அமெரிக்கா பரிந்துரைத்தும், தாங்கள் அதனைச் செய்யவில்லையென்று இலங்கை ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளதாக கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் கொழும்புப் ஆங்கிலப் பத்திரிகையில் பத்தியாளர் ஒருவருக்கு இலங்கைக் கடற்படைத் தளபதி வழங்கிய பிறிதொரு செய்தியில், புலிகளின் கப்பல்களை அழிப்பதற்கான துல்லியத் தகவல்களை அமெரிக்காவே தந்து 2004ம் ஆண்டிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை ஏற்றி வந்த கப்பல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள இச்செய்தியின் பிரகாரம் நோர்வேயின் முயற்சியுடனான பேச்சு ஆரம்பித்தவுடனே அமெரிக்கா செய்த பரிந்துரைகளில் ஒன்றாக இந்த கொத்தணிக் குண்டுகளைக் கொள்வனவு செய்து புலிகளுக்கு எதிராகப் பாவிக்கும்படியான பரிந்துரை இடம்பெற்றுள்ளது.
நோர்வேப் பேச்சுக்கள் ஆரம்பித்தவுடனேயே இலங்கையின் முப்படைகளுக்கும் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களில் விமானப்படைக்கென அமெரிக்காவால் வழங்கப்பட்ட அறிவுரையிலேயே இந்தக் கொத்தணிக் குண்டுகளைப் பாவிக்குமாறான பரிந்துரை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, ஆதாரமும் மேற்படி செய்தியோடு இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating