காரை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாக்கிய நாய்!

Read Time:2 Minute, 10 Second

3750thumஅமெரிக்காவில் நாயொன்று தனது உரிமையாளரின் காரை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாக்கிய சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

டொபி சிகுவா{ஹவா எனப் பெயரிப்பட்ட சிறிய நாய் ஒன்றே இவ்வாறு உரிமையாளரின் காரை ஓட்டிச் சென்று டபிதா ஒமேசே என்ற பெண் ஓட்டி வந்த காரில் மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் வொஷிங்டன் மாநிலத்தில் ஸ்போகேன் நகரில் இடம்பெற்றுள்ளது. டபிதாவின் கார் டயர் மற்றுமொரு வாகனத்துடன் மோதியுள்ளது.

இதனையடுத்து வாகனத்தை மோதியவர் யார் எனப் பார்த்த போது காரின் சுக்கானை (ஸ்டேரிங் வீல்) பிடித்தவாறு நாய் அமர்ந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து டபிதா கூறுகையில், ‘மோதிய காரைப் பார்த்த போது சுக்கானை பிடித்தவாறு நாய் ஒன்று என்னைப் பார்த்தது. காரில் வேறு எவரும் இருக்கவில்லை.

நான் ஏமாற்றப்பட்டேனா அல்லது நாய் காரைச் ஓட்டி வந்ததா என எனக்குத் தெரியவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

நாய் ஓட்டிவந்த கார் ஜேஸன் மார்டின்ஸ் என்பவருக்கு சொந்தமானது. அவர் கடைக்குச் சென்ற வேளையிலேயே நாய் காருடன் விபத்துக்குள்ளாகியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

‘காரில் இருந்த சிகுவா{ஹவா தவறுதலாக கியரை உதைக்க கார் நகர்ந்திருக்கலாம்’ என விபத்து நடந்த இடத்துக்கு வந்த ஜேஸன் கூறியுள்ளார். இவ்விபத்தின்போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறையில் அடைக்கப்பட்ட கணவரின் உயிரணுவை கடத்தி குழந்தை பெற்ற பெண்
Next post சக மாணவிக்கு முத்தமிட்ட, 6 வயது பள்ளி மாணவன் சஸ்பெண்டு