நோர்வே சேதுவின் குடும்பத்தில் பிளவு??
புலிகளின் நிதர்சனம் இணையதளத்தின் மறைமுக ஆசிரியர் நோர்வேசேது அல்லது ஊத்தைசேது என்றழைக்கப்படும் நடராஜா சேதுரூபன் குடும்பத்தில் பிளவு என நோர்வேயில் இருந்து கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்படி சேது வேலைவெட்டி இல்லாமல் தாதியாகப் பணிபுரியும் அவரது மனைவி லதாவின் ஊதியத்திலும், புலிகளால் வழங்கப்படும் பணத்திலும் பல இணையதளங்களை பொய்யான பெயர்களில் பதிவுசெய்து மாற்று கருத்துக் கொண்டோர் குறித்தும் மாற்றுக்கருத்துக்களைக் கொண்ட அமைப்புக்கள் குறித்தும் மிகவும் கேவலமான முறையிலும், மிகமிக கீழ்த்தரமான முறையிலும் (து}சணை வார்த்தைகளால்) செய்திகளை வெளியிட்டு வருவதும் அறிந்ததே.
அண்மையில் தனது மனைவியையும், தனது ஏழுமாத கைக்குழந்தையையும் கைவிட்டுவிட்டு லண்டனில் தயா இடைக்காடரினால் நடத்தப்பட்ட உண்ணாவிரதம் என்ற கூத்துக்கு இவர் சென்றவரென்றும், அங்கு ரி.பி.சி வானொலி நிலையத்தை முற்றுகையிட்டு விவேகானந்தன் என்பவரை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் லண்டன் காவல்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டபோது, ஏழுமாத கைக்குழந்தைக்கு பால்வாங்குவதற்கு கூட முடியாத நிலையில் சேதுவினால் தான் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக தாதியான அவரது மனைவி லதா கதறி அழுததுடன், தொடர்ந்தும் சேதுவுடன் இணைந்து வாழ முடியாதென்றும் லதா தெரிவித்ததாகவும் கற்போது விவாகரத்து முடிவுக்குச் சென்றுள்ளதாகவும் அவரது உறவினர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் நிதர்சனம்.நெற் இணையதளத்திற்கு அனுப்பி வைத்துள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(குறிப்பு:- இச்செய்தி குறித்து சேது தரப்பினால் -தமிழில்-தரப்படும் தகவலும் எம்மால் பிரசுரிக்கப்படும்.)